பதிவு செய்த நாள்
10 மார்2013
00:44
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 330 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுளளது.நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 345 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை விலையை, 15 காசுகள் குறைத்து, 330 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.'ஈஸ்டர் பண்டிகை காரணமாக முட்டை நுகர்வு பரவலாக குறைந்துள்ளது. அதன் எதிரொலியாக முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது' என, பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை 346, பெங்களூரு 335, மைசூர் 335, ஹைதராபாத் 320, மும்பை 352, விஜயவாடா 320, கோல்கட்டா 345, பார்வாலா 305, டில்லி 335. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டைக் கோழி விலை, 49 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 52 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|