பதிவு செய்த நாள்
10 மார்2013
00:50
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பல்வேறு கூடுதல் ஊக்குவிப்பு
திட்டங்கள், அடுத்த மாதம் அறிவிக்கப் படும் என, 'பிக்கி' அமைப்புடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள, பொருளாதார சுணக்க நிலையால், அந்நாடுகளின் தேவைப்பாடு குறைந்துள்ளது. மேலும், இதர ஆசிய நாடுகளிலும், மந்த நிலை நிலவுகிறது.
ஏற்றுமதி கடன்:இதனால், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு, டாலர் அடிப்படையில் கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக, மத்திய அரசு, ஏற்றுமதி கூட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து, கலந்தாலோசித்து வருகிறது.
பாரம்பரிய சந்தைகள் தவிர, புதிய சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்தும், ஆராயப்பட்டு வருகிறது என, ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இந்நிலையில், நாட்டின் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்துள்ளதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 4.86 சதவீதம் சரிவடைந்து, 29,968 கோடி டாலராக குறைந்துள்ளது. இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 0.01 சதவீதம் உயர்ந்து, 40,685 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 16,716 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தில், 15,489 கோடி டாலராக இருந்தது.வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இது, அரசுக்கு அதிக இடர்பாடு அளிப்பதாக உள்ளது.எனவே, நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு, புதிய அறிவிப்புகள், அடுத்த மாதம் வெளியாகும் வர்த்தக கொள்கையில் இடம்பெறும் என, ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|