ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை11.8 சதவீதம் வளர்ச்சி காணும்ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை11.8 சதவீதம் வளர்ச்சி காணும் ... 'பத்திக்கிச்சு' பஞ்சு விலை:உயர போகுது நூலிழை 'பத்திக்கிச்சு' பஞ்சு விலை:உயர போகுது நூலிழை ...
ஏற்றுமதியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும்:மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:50

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பல்வேறு கூடுதல் ஊக்குவிப்பு
திட்டங்கள், அடுத்த மாதம் அறிவிக்கப் படும் என, 'பிக்கி' அமைப்புடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள, பொருளாதார சுணக்க நிலையால், அந்நாடுகளின் தேவைப்பாடு குறைந்துள்ளது. மேலும், இதர ஆசிய நாடுகளிலும், மந்த நிலை நிலவுகிறது.

ஏற்றுமதி கடன்:இதனால், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு, டாலர் அடிப்படையில் கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக, மத்திய அரசு, ஏற்றுமதி கூட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து, கலந்தாலோசித்து வருகிறது.
பாரம்பரிய சந்தைகள் தவிர, புதிய சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்தும், ஆராயப்பட்டு வருகிறது என, ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இந்நிலையில், நாட்டின் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்துள்ளதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 4.86 சதவீதம் சரிவடைந்து, 29,968 கோடி டாலராக குறைந்துள்ளது. இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 0.01 சதவீதம் உயர்ந்து, 40,685 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை:இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 16,716 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தில், 15,489 கோடி டாலராக இருந்தது.வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இது, அரசுக்கு அதிக இடர்பாடு அளிப்பதாக உள்ளது.எனவே, நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு, புதிய அறிவிப்புகள், அடுத்த மாதம் வெளியாகும் வர்த்தக கொள்கையில் இடம்பெறும் என, ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)