பதிவு செய்த நாள்
11 மார்2013
00:26
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின், பருத்தி ஜவுளி ஏற்றுமதி, 956 கோடி டாலராக (52,580 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு மதிப்பிட்டு உள்ளது.
இந்திய பருத்தி ஜவுளிகளுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. நடப்பு நிதியாண்டில், 900 கோடி டாலர் (49,500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, பருத்தி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், பல நாடுகளில், இந்திய பருத்தி ஜவுளிக்கு தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, பருத்தி ஜவுளி ஏற்றுமதி, 956 கோடி டாலராக (52,580 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த, 2011-12ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 842 கோடி டாலர் (46,310 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், பருத்தி நூலிழை ஏற்றுமதி, 8 சதவீதம் என்ற அளவிலும், துணி ஏற்றுமதி, 9 சதவீதம் என்ற அளவிலும், வீட்டு உள் அலங்கார துணி ஏற்றுமதி, 10 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும் என, எதிர் பார்க்கப்படுகிறது.ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில், ஜவுளி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப் படுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவுடன், இந்தியா விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இதனால், மேற்கண்ட நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியை விரிவுபடுத்த, ஜவுளித் துறை பரிசீலித்து வருகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|