அலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்புஅலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்பு ... இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் அபாயம் இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
குண்டு மிளகாய்க்கு சிக்கல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:27

சிவகங்கை:சிவகங்கை, இளையான்குடியில் தொடர் மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான மிளகாய் வற்றல், செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இளையான்குடி கண்ணமங்கலம், பொன்னியநேந்தல், கீரனூர், சாலைகிராமம் உள்ளிட்ட கிராமங்களில், 2,000 ஏக்கரில், குண்டு மிளகாய் வற்றல் பயிர் செய்கின்றனர்.
இவை அதிக காரமாக இருப்பதால், வியாபாரிகள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வர். ஏக்கருக்கு, 70 மூட்டை வரை (மூட்டை 20 கிலோ) விளைச்சல் இருக்கும். ஆண்டுதோறும் டிசம்பரில் நடவு செய்து, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும்.பருவ மழை பொய்த்ததால், இப்பகுதி விவசாயிகள், தாமதமாக மிளகாய் பயிரிட்டனர். அறுவடையின் போது, வெயில் இருந்தால் மட்டுமே, மிளகாயை பறித்து காய வைப்பர்.
இந்நிலையில், மிளகாய் வற்றல் பயிர் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, தொடர் மழை பெய்து வருவதால், அதை பறித்து, காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவை, செடியிலேயே அழுகுவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணமங்கலம் விவசாயி பற்குணன் கூறுகையில், "பருவ மழை இல்லாததால், மிளகாய் நடவு குறைந்து விட்டது. அறுவடைக்கு வரும் நிலையில், மழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது', என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)