பதிவு செய்த நாள்
11 மார்2013
00:27
சிவகங்கை:சிவகங்கை, இளையான்குடியில் தொடர் மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான மிளகாய் வற்றல், செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இளையான்குடி கண்ணமங்கலம், பொன்னியநேந்தல், கீரனூர், சாலைகிராமம் உள்ளிட்ட கிராமங்களில், 2,000 ஏக்கரில், குண்டு மிளகாய் வற்றல் பயிர் செய்கின்றனர்.
இவை அதிக காரமாக இருப்பதால், வியாபாரிகள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வர். ஏக்கருக்கு, 70 மூட்டை வரை (மூட்டை 20 கிலோ) விளைச்சல் இருக்கும். ஆண்டுதோறும் டிசம்பரில் நடவு செய்து, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும்.பருவ மழை பொய்த்ததால், இப்பகுதி விவசாயிகள், தாமதமாக மிளகாய் பயிரிட்டனர். அறுவடையின் போது, வெயில் இருந்தால் மட்டுமே, மிளகாயை பறித்து காய வைப்பர்.
இந்நிலையில், மிளகாய் வற்றல் பயிர் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, தொடர் மழை பெய்து வருவதால், அதை பறித்து, காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவை, செடியிலேயே அழுகுவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணமங்கலம் விவசாயி பற்குணன் கூறுகையில், "பருவ மழை இல்லாததால், மிளகாய் நடவு குறைந்து விட்டது. அறுவடைக்கு வரும் நிலையில், மழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது', என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|