பதிவு செய்த நாள்
11 மார்2013
00:29
நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், 8,51,200 டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால உற்பத்தியை (8,48,400 டன்) விட, 0.3 சதவீதம் அதிகம் என, ரப்பர் வாரியம் தெரிவித்து உள்ளது.
இதே காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 0.9 சதவீதம் உயர்ந்து, 8.82 லட்சம் டன்னிலிருந்து, 8.90 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.இதே காலத்தில், ரப்பர் ஏற்றுமதி, 24,700 டன்னிலிருந்து, 22,400 டன்னாக குறைந் துள்ளது. அதேசமயம் இதன் இறக்குமதி, 15 சதவீதம் அதிகரித்து, 1.90 லட்சம் டன்னிலிருந்து, 2.07 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், சர்வதேச சந்தை விலையை விட, உள்நாட்டில், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை, 17-20 ரூபாய் குறைந்திருந்த நிலையிலும், இதன் இறக்குமதி அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரப்பர் ஏற்றுமதி, 970 டன்னிலிருந்து, 6,650 டன்னாக அதிகரித்து உள்ளது. இதே மாதத்தில், இதன் இறக்குமதி, 24,519 டன்னிலிருந்து, 9,407 டன்னாக சரிவடைந்து உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.7 சதவீதம் குறைந்து, 61 ஆயிரம் டன்னாக சரிவடைந்திருந்தது. இதே மாதத்தில், உள்நாட்டில் ரப்பர் பயன்பாடு, 2.7 சதவீதம் குறைந்து, 73 ஆயிரம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டில், ரப்பர் உற்பத்தி குறைந்துள்ள அதே நேரத்தில், இதற்கான தேவையும் குறைந்து உள்ளது. இதனால், இதன் விலையும் சற்று சரிவடைந்து உள்ளது.சர்வதேச விலையை விட, உள்நாட்டில் ரப்பரின் விலை குறைவாக இருப்பதால், நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில், ரப்பர் இறக்குமதி, 2.15 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 2.50 லட்சம் டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|