அலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்புஅலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்பு ... இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் அபாயம் இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பிஸ்கட் சந்தையில் கடும் போட்டி: நுகர்வோருக்கு ஆதாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:32

புதுடில்லி:இந்திய பிஸ்கட் சந்தையில் போட்டி தீவிரமடைந்துள்ளதால், பல நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கி, விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.பிஸ்கட் நிறுவனங்கள் இடையிலான போட்டி, நுகர்வோருக்கு ஆதாயத்தை அளித்துள்ளது.
இந்தியாவில், பிஸ்கட் விற்பனையில், பிரிட்டானியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. எனினும், ஐ.டி.சி., நிறுவனத்தின் கடும் போட்டியால், பிரிட்டானியா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு குறைந்து வருகிறது.
பிரிட்டானியா:குறிப்பாக, சென்ற, 2012ம் ஆண்டு டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், பிஸ்கட் சந்தையில், பிரிட்டானியாவின் பங்களிப்பு, 29.8 சதவீதமாக குறைந்துள்ளது.இது, முந்தைய 2011ம் ஆண்டு, இதே காலத்தில், 31.2 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.அதேசமயம், இதே காலத்தில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு, 2 சதவீதம் உயர்ந்து, 9.3 சதவீதத்தில் இருந்து, 11.3 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இத்தகைய போக்கால், பிரிட்டானியா நிறுவனம், பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கி, அதன் பிஸ்கட் விற்பனையையும், சந்தைப் பங்களிப்பையும் உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதன்படி, 140 ரூபாய்க்கு பிரிட்டானியாவின் குட்டே சாக்கோநட் பிஸ்கட் பாக்கெட் வாங்கினால், 50 ரூபாய் மதிப்புள்ள, ஜார் இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும், தலா, 150 கிராம் எடையிலான இரண்டு குட்டே முந்திரி பிஸ்கட் பாக்கெட் வாங்குவோருக்கு, குக்கி ஜார் இலவசம் எனவும்,பிரிட்டானியா விளம்பரம் செய்கிறது.
இதே போன்று, 100 கிராம் நியூட்ரிசாய்ஸ் பிஸ்கட் வாங்கினால், ஒரு கிண்ணம் இலவசமாக வழங்கப்படுகிறது.இது போன்று, மேலும் பல்வேறு பிஸ்கட்டுகளுக்கு, இலவசங்களை வழங்குவது குறித்து, இந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.அதே சமயம், ஐ.டி.சி., நிறுவனம், வித விதமான பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்தி, சந்தையில் வலுவாக காலூன்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஐ.டி.சி.,:சிறந்த தரமான பிஸ்கட்டுகள், புதுமையான பேக்கிங், சிறுவர் முதல் பெரியோர் வரை கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் விற்பனையில் வளர்ச்சி கண்டு வருகிறது.இந்நிறுவனத்தின் சன்பீஸ்ட் பிஸ்கட்டுகள், பிரிட்டானியாவின் டைகர் பிஸ்கட்டுகளுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளன. இது தவிர, ஐ.டி.சி., நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சன்பீஸ்ட் டார்க் பேன்டசி சாக்கோபில்ஸ், டிரீம் கிரீம் பிஸ்கட்ஸ் ஆகியவையும், இதர நிறுவனங்கள் உடனான போட்டியை தீவிரப்படுத்தி உள்ளன.
எனினும், பிரிட்டானியா நிறுவனத்தின் பியூர் மேஜிக் பிஸ்கட், ஐ.டி.சி.,நிறுவனத்தின் டார்க் பேன்டசி உடனான போட்டியை சமாளித்து, விற்பனையில் வளர்ச்சி கண்டு வருகிறது. குளுகோஸ் பிஸ்கட் சந்தையில், ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பார்லே நிறுவனம், பெருகி வரும் போட்டியை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நொறுக்குத் தீனி துறையில், பல்வேறு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளதால், பிஸ்கட் நுகர்வு வளர்ச்சி, மந்த மடைந்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாரம்பரிய நிறுவனங்கள் கூட, பிஸ்கட் சந்தையில், அவற்றின் பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், பல புதிய நிறுவனங்கள் அதிரடியாக இச்சந்தையில் குதித்து வருகின்றன.
மேலும், பல நிறுவனங்களும் களமிறங்க உள்ளன. இந்த வகையில், புதிய வரவான, மெக்விட்டிஸ் நிறுவனம், இலவசங்களை அளித்து, அதன் பிஸ்கட் விற்பனையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மெக்விட்டிஸ்:இதன், 100 கிராம் மெக்விட்டிஸ் டைஜஸ்டிவ் பிஸ்கட் வாங்குவோருக்கு, மைக்ரோவேவ் சாதனத்தில் வைக்கக்கூடிய பாத்திரத்தை இலவசமாக வழங்குகிறது. அதுபோன்று, 150 கிராம் மெக்விட்டிஸ் டைஜஸ்டிவ் பிஸ்கட் வாங்கினால், 25 ரூபாய் மதிப்புள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் இலவசமாக பெறலாம்.பிஸ்கட் சந்தையில் நடக்கும் போட்டியால், பல்சுவை கொண்ட பல்வேறு பிஸ்கட்டுகளை சுவைக்கவும், அத்துடன் இலவசங்களை பெறும் வாய்ப்பும் நுகர்வோருக்கு கிடைத்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)