பதிவு செய்த நாள்
11 மார்2013
09:18
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் (9.10 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.35 புள்ளிகள் குறைந்து 19679.88 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.40 புள்ளிகள் அதிகரித்து 5946.10 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மிகவும் சாதகமாக இருந்ததால், மதியத்திற்கு பிறகு வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 1.39 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது. ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி, நான்காவது காலாண்டில் சிறப்பாக மேம்பட்டுள்ளது; அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|