பதிவு செய்த நாள்
14 மார்2013
01:02
திண்டுக்கல்:திண்டுக்கல்லில், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புளிச்சந்தை துவங்கியது. வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்தனர்.
தமிழகத்தில், புளி விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டத்தில், திண்டுக்கல்லும் ஒன்று. மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை ஆகிய ஊர்களில், அதிக எண்ணிக்கையில், புளிய மரங்கள் உள்ளன.
திண்டுக்கல்லில் ஆண்டுக்கு, ஒரு முறை கூடும் புளிச்சந்தை, திங்கட்கிழமை துவங்கியது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இச்சந்தை கூடும். இது, ஜூலை மாதம் வரை நீடிக்கும். கொட்டையுடன் கூடிய புளி கிலோ, 30 ரூபாய்க்கும், கொட்டை எடுத்த புளி கிலோ, 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ராமையன்பட்டி விவசாயி ஸ்டீபன் கூறுகையில், "ஆண்டுதோறும், 5 மாதங்கள் நடக்கும் புளிச்சந்தையில், விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாததால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. வரத்து அதிகம் என்பதால், விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|