பதிவு செய்த நாள்
14 மார்2013
01:07
நடப்பு ஆண்டில், நாட்டின் கடுகு எண்ணெய் உற்பத்தி, 27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், இதன் உற்பத்தி, 17.70 லட்சம் டன்னாக இருந்தது என, கோத்ரெஜ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின், இயக்குனர் துராப் மிஸ்த்ரி தெரிவித்தார்.
விளைச்சல்:நடப்பு ரபி பருவத்தில், கடுகு விளைச்சல் சிறப்பாக உள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த ஆண்டில், ஒரு ஹெக்டேருக்கு, 893 கிலோவாக இருந்த கடுகு உற்பத்தி, நடப்பாண்டில், 1,103 கிலோவாக உயர்ந்துள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.இதையடுத்து, நடப்பாண்டில், கடுகு எண்ணெய் உற்பத்தி, 22.50 லட்சம் டன் என்ற அளவில் சிறப்பாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பயன்பாடு:இந்தியாவின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டில், கடுகு எண்ணெயின் பங்களிப்பு, 13 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.பருவ மழை பற்றாக்குறையால், விவசாயிகள், நிலக்கடலை பயிரிடுவதை தவிர்த்து, மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, நடப்புஆண்டில், நாட்டின் கடலை எண்ணெய் உற்பத்தி, 60 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4 லட்சம் டன்னிலிருந்து, 1.60 லட்சம் டன்னாக சரிவடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், கடுகு எண்ணெய் உற்பத்தி இருக்கும் என, துராப் மிஸ்த்ரி தெரிவித்தார்.நடப்பாண்டு, ஜனவரி 18ம் தேதி வரையிலுமாக, நாட்டின் ஒட்டு மொத்த கடுகு பயிரிடும் பரப்பளவு, 64.50 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் இதே காலத்தில், அரசின் மறுமதிப்பீட்டில், இதன் பயிரிடும் பரப்பளவு, 65.80 லட்சம் ஹெக்டேராக இருந்தது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பரப்பளவு:நடப்பாண்டில், கடுகு பயிரிடும் பரப்பளவு, குறைந்துள்ள நிலையிலும், இதன் உற்பத்தி, 58.80 லட்சம் டன்னிலிருந்து, 71.10 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு, ஒரு ஏக்கருக்கான கடுகு உற்பத்தி திறன், கடந்த ஆண்டை விட, சிறப்பாக இருக்கும் என்ற மதிப்பிடே முக்கிய காரணமாகும் என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, 2013-14ம் சந்தைப் பருவத்திற்கு, கடுகு வித்துக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை, 20 சதவீதம் உயர்த்தி, குவிண்டாலுக்கு, 2,500 ரூபாயிலிருந்து, 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடுகு உற்பத்தியாளர்களை மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது.
இறக்குமதி:நம் நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் பயன்பாடு, 1.65 கோடி டன்னாக உள்ளது. இதில், 57 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.இந்நிலையில், உள்நாட்டில், கடுகு எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததை யடுத்து, சமையல் எண்ணெய் இறக்குமதி, வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|