பதிவு செய்த நாள்
14 மார்2013
01:09
ஊட்டி,:நீலகிரி மாவட்டத்தில், அரசின் 'ஊட்டி டீ' விற்பனையை பிரபலப்படுத்த, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசின், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கூட்டமைப்பு (இன்கோ), குன்னூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.விற்பனை கூடங்கள்:இந்த அமைப்பின் சார்பில், 'ஊட்டி டீ' என்ற பெயரில், தேயிலை தூள் தயாரிக்கப் பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. தவிர, ஆங்காங்கே 'இன்கோ விற்பனை கூடங்கள்' அமைக்கப்பட்டு,'ஊட்டி டீ' விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், மக்கள் குறை தீர்ப்பு நாட்களில், 'ஊட்டி டீ' விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம், இந்த விற்பனை நடந்து வருகிறது.
'வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள், மனு வழங்க வருவர். அவர்களிடையே, 'ஊட்டி டீ' யை பிரபலப் படுத்தி, அதன் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என, பண்டக சாலை ஊழியர்கள் கூறினர்.கடந்த ஜன., 4ம் தேதி, ஊட்டி எடக்காடில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த விழாவில், 'ஊட்டி டீ'யை ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.
ஆவின் பாலகங்கள்நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆவின் பாலகங்கள், டீக்கடைகள், சில்லரை கடைகளாக தான் செயல்படுகின்றன. அங்கு டீ, காபி, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.
ஒரு சில ஆவின் பாலகங்கள், இட்லி, தோசை உணவுகளையும் விற்கின்றன. பல பாலகங்களில், 'ஊட்டி டீ', விற்கப்படுவது குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, அரசு முயற்சி மேற்கொண்டால் 'ஊட்டி டீ' விற்பனை @மலும் அதிகரிக்கும் என, நீலகிரி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|