கறிக்கோழி உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் முடிவுகறிக்கோழி உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் முடிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது ...
ஊட்டி தேயிலை விற்பனையை உயர்த்த புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
01:09

ஊட்டி,:நீலகிரி மாவட்டத்தில், அரசின் 'ஊட்டி டீ' விற்பனையை பிரபலப்படுத்த, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசின், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கூட்டமைப்பு (இன்கோ), குன்னூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.விற்பனை கூடங்கள்:இந்த அமைப்பின் சார்பில், 'ஊட்டி டீ' என்ற பெயரில், தேயிலை தூள் தயாரிக்கப் பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. தவிர, ஆங்காங்கே 'இன்கோ விற்பனை கூடங்கள்' அமைக்கப்பட்டு,'ஊட்டி டீ' விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், மக்கள் குறை தீர்ப்பு நாட்களில், 'ஊட்டி டீ' விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம், இந்த விற்பனை நடந்து வருகிறது.
'வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள், மனு வழங்க வருவர். அவர்களிடையே, 'ஊட்டி டீ' யை பிரபலப் படுத்தி, அதன் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என, பண்டக சாலை ஊழியர்கள் கூறினர்.கடந்த ஜன., 4ம் தேதி, ஊட்டி எடக்காடில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த விழாவில், 'ஊட்டி டீ'யை ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.
ஆவின் பாலகங்கள்நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆவின் பாலகங்கள், டீக்கடைகள், சில்லரை கடைகளாக தான் செயல்படுகின்றன. அங்கு டீ, காபி, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.
ஒரு சில ஆவின் பாலகங்கள், இட்லி, தோசை உணவுகளையும் விற்கின்றன. பல பாலகங்களில், 'ஊட்டி டீ', விற்கப்படுவது குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, அரசு முயற்சி மேற்கொண்டால் 'ஊட்டி டீ' விற்பனை @மலும் அதிகரிக்கும் என, நீலகிரி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)