வருமான வரி பாக்கி 31ம் தேதி வரை கெடுவருமான வரி பாக்கி 31ம் தேதி வரை கெடு ... பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
12:22

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கி கிளைகளில் லாக்கர்களை பயன்படுத்தும் பெண்களுக்காக, அழகு நிலைய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி, "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா!' இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்காக, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், தங்கள் வங்கிகளின், "லாக்கர்'களில், நகைகளை பாதுகாப்பாக வைக்கும் பெண்களுக்காக, "மினி அழகு நிலைய' சேவையையும் சமீபத்தில் துவக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், 20 கிளைகளில், இந்த அழகு நிலைய சேவைகள் துவக்கப்பட்டுள்ளன.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்பும் பெண்கள், வங்கியில் உள்ள லாக்கரில் இருந்து, தங்களின் நகைகளை எடுக்க வரும் போது, லாக்கர் அறையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மினி அழகு நிலையத்தில், தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். அதற்கேற்றபடி, அந்த அழகு நிலையத்தில், ஒரு அலங்கார மேஜை, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, எண்ணெய், சோப்பு, லிப்ஸ்டிக், கிரீம், பேஸ் வாஷ், பவுடர், ஐ லைனர் உட்பட, பல வகையான அழகு சாதனப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். இதற்கென வாடிக்கையாளர்களிடம், கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இது குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது: வங்கியின் இந்த சேவை, மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. சுப நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ள செல்லும் போது, வங்கியிலேயே எங்களை அழகுபடுத்திக் கொள்வதால், கவலையின்றி சென்று வர முடிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், நேராக வங்கிக்கு சென்று நகையை வைத்து விடுவதால், திருட்டு பயமின்றி, மகிழ்ச்சியாக உள்ளோம். இவ்வகை சேவையால், வங்கிகளில், லாக்கர்களை பயன்படுத்தும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து வங்கிகளும் இந்த சேவையை தொடங்கினால், பெண்கள் மிகுந்த பயனடைவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)