பதிவு செய்த நாள்
14 மார்2013
16:23
ஆண்டு தோறும் உலக அளவில் மொபைல் கண்காட்சியும் கருத்தரங்கும் நடைபெறும். இதில் மொபைல் போன்களுக்கான புதிய தொழில் நுட்பம் மற்றும் புதிய மொபைல் மாடல்களை, முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவார்கள். அப்போது சிறந்த மொபைல் போன்களுக்கான விருதுகள், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சில விருதுகளை இங்கு பார்க்கலாம்.
சிறந்த ஸ்மார்ட்போனுக்கான விருது, சாம்சங் காலக்ஸி எஸ்3க்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற ஐபோன்-5 கடும் போட்டியில் இருந்தது. இருப்பினும் சாம்சங் பல்வேறு புதிய வசதிகளின் அடிப்படையில் முதல் இடத்தைப் பெற்றது. சிறந்த மொபைல் டேப்ளட் விருது கூகுள் நெக்சஸ் 7 பெற்றது. இதனுடன் போட்டியிட்ட ஐபேட் மற்றும் ஐபேட் மினி விருதைப் பெறவில்லை. சிறந்த வசதிகளை அளிக்கும் தொடக்க நிலை மொபைல் போனாக, நோக்கியா ஆஷா 305 விருதினைப் பெற்றுள்ளது.
சிறந்த மொபைல் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கான விருது உட்பட மொத்தம் ஐந்து விருதுகளை சாம்சங் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|