பதிவு செய்த நாள்
15 மார்2013
05:55
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் யூரியா உர இறக்குமதி, 78.65 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (76.75 லட்சம் டன்) விட, 2.5 சதவீதம் அதிகம் என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பார்லிமென்டில் தெரிவித்தார்.
மத்திய அரசு, யூரியா உரத்தை விவசாயிகளுக்கு, ஒரு டன், 5,360 ரூபாய்க்கு, மானியத்துடன் கூடிய அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் வழங்குகிறது. உள்நாட்டில், யூரியா உற்பத்தி, 2.20 கோடி டன் என்ற அளவில் உள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உள்நாட்டில் போதிய அளவிற்கு ரசாயன உரங்கள் உற்பத்தி இல்லாததால், வெளிநாடுகளில் இருந்து யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உர வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|