பதிவு செய்த நாள்
16 மார்2013
00:46
டோக்கியோ:ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார் கம்பெனி, விற்பனை செய்யப்பட்ட, 2.50 லட்சம் வாகனங்களை, திரும்பப் பெற்று, பிரேக் கோளாறுகளை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.இதில், சொகுசு சேடன்கள், மினி வேன்கள், பன்முக பயன்பாட்டு வாகனம் என, மொத்தம், ஏழு மாடல் வாகனங்கள் அடங்கும்.
மேற்கண்ட வாகனங்களில், ஓட்டுனர் பிரேக் பெடலை அழுத்தாத போதிலும், தானாகவே பிரேக் பிடிக்கும் குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதனால், இது வரை விபத்து ஏதும் ஏற்பட வில்லை என, ஹோண்டா மோட்டார் நிறுவனம்
தெரிவித்துள்ளது.இந்த வகையில், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, நியூசிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளில், 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, மூன்று மாடல் வாகனங்கள் (அகுரா ஆர்.எல்.சேடன், அகுரா எம்.டீ.எக்ஸ்., ஹோண்டா பைலட்) திரும்பப் பெற்று, பழுது நீக்கம் செய்து தரப்பட உள்ளன.ஜப்பானில், லெஜன்ட் சேடன் கார் மற்றும் ஒடிசே, எலிசன், ஸ்டெப்வேன் ஆகிய மூன்று மினி வேன்களின் பிரேக் சிஸ்டம் சரி செய்து தரப்படும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|