மறைமுக வரி வசூல் 20 சதவீதம் வளர்ச்சிமறைமுக வரி வசூல் 20 சதவீதம் வளர்ச்சி ... புகைப்படத்துடன் 'டெபிட் கார்டு' ரிசர்வ் வங்கி பரிந்துரை புகைப்படத்துடன் 'டெபிட் கார்டு' ரிசர்வ் வங்கி பரிந்துரை ...
நிறுவனங்களின் முன்கூட்டிய வரியில் மிதமான வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2013
01:01

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, மிதமான அளவிலேயே உயர்ந்துள்ளது என, வருமான வரித் துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட்பேங்க் : கணக்கீட்டு காலாண்டில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இவ்வங்கி செலுத்திய முன்கூட்டிய வரி, 600 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கின் முன்கூட்டிய வரி, 25 சதவீதம் உயர்ந்து, 425 கோடியிலிருந்து, 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், நாட்டின் வங்கி துறையில், முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செலுத்திய முன்கூட்டிய வரி, 1,650 கோடியிலிருந்து, 1,450 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.யெஸ் பேங்கின் முன்கூட்டிய வரி, 50 சதவீதம் அதிகரித்து, 110 கோடியிலிருந்து, 165 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அயல்நாட்டு வங்கியான, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்கின் முன்கூட்டிய வரி, 10 சதவீதம் உயர்ந்து, 435 கோடியிலிருந்து, 475 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மோட்டார் வாகனம்:நாட்டின் மோட்டார் வாகன துறையில், சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 2 சதவீதம் மட்டும் உயர்ந்து, 293 கோடியிலிருந்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மகிந்திரா நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 178 கோடியிலிருந்து, 205 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிமென்ட் துறையைச் சேர்ந்த, ஏ.சி.சி., நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 50 சதவீதம் அதிகரித்து, 149 கோடியிலிருந்து, 227 கோடி ரூபாயாகவளர்ச்சி கண்டுள்ளது.தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 10 சதவீதம் உயர்ந்து, 545 கோடியிலிருந்து, 600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த அளவில், நடப்பு நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அயல்நாட்டு அலுவலகங்களுக்காக செலுத்திய முன்கூட்டிய வரி, 6,880 கோடி ரூபாயாக உள்ளது என, வருமான வரி துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபம்:நிறுவனங்கள், அவை ஈட்டும் லாபத்திற்கு ஏற்ப, ஒரு நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன. ஒரு நிறுவனம், எந்த அளவிற்கு முன்கூட்டிய வரியை செலுத்துகிறது என்பதிலிருந்து, அந்நிறுவனத்தின் லாபம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை, ஓரளவிற்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)