புகைப்படத்துடன் 'டெபிட் கார்டு' ரிசர்வ் வங்கி பரிந்துரைபுகைப்படத்துடன் 'டெபிட் கார்டு' ரிசர்வ் வங்கி பரிந்துரை ... நாட்டின் பால் பவுடர் ஏற்றுமதி சூடுபிடிக்கிறது நாட்டின் பால் பவுடர் ஏற்றுமதி சூடுபிடிக்கிறது ...
வரத்து குறைவால் துவரம் பருப்பு விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2013
01:07

சேலம்:மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு துவரம் பருப்பு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை, இரண்டே வாரத்தில் குவிண்டாலுக்கு, 900 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
கொள்முதல்:தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், மார்ச் முதல் வாரத்தில், 7,000 டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்தது. இதனால்,பெரிய வியாபாரிகள் வைத்திருந்த சரக்கு இருப்பின் அளவு வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் வரை, தினம்தோறும் தமிழகத்துக்கு, 50 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த துவரம் பருப்பு, தற்போது, 20 லாரியாக குறைந்து ள்ளது.
அதே நேரத்தில், தமிழக வியாபாரிகளிடம், போதிய அளவு துவரம் பருப்பு இருப்பு இல்லாததால், வெளிச் சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது.
இரு வாரங்களில் துவரம்பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 900 ரூபாய் வரையும், சில்லரை விலையில் கிலோவுக்கு, 11 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.பிப்ரவரி கடைசி வாரத்தில், 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு குவிண்டால், முதல் ரக துவரம் பருப்பு தற்போது, 7,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரகம், 6,300லிருந்து 7,200 ரூபாயாகவும், மூன்றாம் ரகம் 6,000லிருந்து, 6,900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக சில்லரை விலையில், ஒரு கிலோ முதல் ரக துவரம் பருப்பு விலை,66 ரூபாயில் இருந்து, 78 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு: இரண்டாம் ரகம் 60லிருந்து, 72 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 58லிருந்து, 68 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.தமிழக அரசு, பொதுவினியோக திட்டத்துக்கான பருப்பை, வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தால் மட்டுமே, துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த முடியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)