பதிவு செய்த நாள்
17 மார்2013
00:29
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 22 கோடி டாலர் (1,210 கோடி ரூபாய்) குறைந்து, 29,035 கோடி டாலராக (15.97 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 134 கோடி டாலர் (7,370 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,057 கோடி டாலராக (15.98 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்து வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,629 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 11 லட்சம் டாலர் மற்றும் 5 லட்சம் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|