பதிவு செய்த நாள்
17 மார்2013
00:32
புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மின்னணு சாதனங்கள் இறக்குமதி, 1.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (1.21 லட்சம் கோடி ரூபாய்) விட, 30 சதவீதம் அதிகம் என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.மத்திய அரசு, உள்நாட்டில் மின்னணு வன்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதையடுத்து, வரும் 2020ம் ஆண்டில், இத்துறையின் விற்றுமுதலை, 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த இலக்கை எட்டும் வகையில், 10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2.80 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|