கறுப்பு பண விவகாரம் எச்.டி.எப்.சி., புது முடிவுகறுப்பு பண விவகாரம் எச்.டி.எப்.சி., புது முடிவு ... மொத்த உள்நாட்டு உற்பத்தியில்வேளாண் துறை பங்களிப்பு குறைகிறது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்வேளாண் துறை பங்களிப்பு குறைகிறது ...
விவசாய கடன்கள் தள்ளுபடி திட்டம்: வங்கிகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2013
15:11

புதுடில்லி:"விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, மத்திய தலைமை கணக்கு அதிகாரி (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தில், முறைகேடு நடந்ததாகவும், விவசாயி அல்லாதோர் இந்த திட்டத்தால் பயன் பெற்றதாகவும், சி.ஏ.ஜி., சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கான விதிமுறைகøளை பின்பற்றவில்லை என்றும், சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான ஒரு கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் அளித்த பதில்:"விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கென, குறிப்பிட்ட சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என, சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இது தொடர் பாக, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் போது, அந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, வங்கிகளுக்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாய கடனை தள்ளுபடி செய்யும்போது, பயனாளிகளை பற்றிய விவரங்களை உறுதி செய்து, இந்த திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு, அவர் தகுதியான நபர் தானா என்பதையும், ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, வினோத் ராய் பேசியதாவது: ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகளை, சி.ஏ.ஜி., வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக, சி.ஏ.ஜி., மீது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சி.ஏ.ஜி.,யை பல உறுப்பினர்களை உடைய அமைப்பாக, மாற்ற வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.இவ்வாறு மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த அமைப்புக்கு, முக்கிய பொறுப்புகளும், போதிய அதிகாரமும் அளிக்க வேண்டும்.இவ்வாறு, வினோத் ராய் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)