பதிவு செய்த நாள்
17 மார்2013
15:11
புதுடில்லி:"விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, மத்திய தலைமை கணக்கு அதிகாரி (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தில், முறைகேடு நடந்ததாகவும், விவசாயி அல்லாதோர் இந்த திட்டத்தால் பயன் பெற்றதாகவும், சி.ஏ.ஜி., சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கான விதிமுறைகøளை பின்பற்றவில்லை என்றும், சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான ஒரு கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் அளித்த பதில்:"விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கென, குறிப்பிட்ட சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என, சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இது தொடர் பாக, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் போது, அந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, வங்கிகளுக்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாய கடனை தள்ளுபடி செய்யும்போது, பயனாளிகளை பற்றிய விவரங்களை உறுதி செய்து, இந்த திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு, அவர் தகுதியான நபர் தானா என்பதையும், ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, வினோத் ராய் பேசியதாவது: ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகளை, சி.ஏ.ஜி., வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக, சி.ஏ.ஜி., மீது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சி.ஏ.ஜி.,யை பல உறுப்பினர்களை உடைய அமைப்பாக, மாற்ற வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.இவ்வாறு மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த அமைப்புக்கு, முக்கிய பொறுப்புகளும், போதிய அதிகாரமும் அளிக்க வேண்டும்.இவ்வாறு, வினோத் ராய் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|