பதிவு செய்த நாள்
18 மார்2013
23:17
புதுடில்லி: நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 5,600 கோடி டாலராக (3.08 லட்சம் கோடி ரூபாய்) சரிவடையும் என, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் அமன் சதா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், 6,000 கோடி டாலருக்கு (3.30 லட்சம் கோடி ரூபாய்) பொறியியல் சாதனங்கள்
ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் பொருளாதாரம், இன்னும் முழுமையான அளவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவில்லை.மேலும், புதிய சந்தை நாடுகளான லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவிற்கு, ஏற்றுமதி செய்யப்படும் பொறியியல் சாதனங்களுக்கான தொகை கிடைக்க, கால தாமதமாகலாம் என்ற நிலைப்பாடும் காணப்படுகிறது.
இதையடுத்து, அந்நாடுகளுக்கான ஏற்றுமதியும் சுணக்கம் கண்டுள்ளது. இது போன்றவற்றால், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, இலக்கை காட்டிலும், 6 சதவீதம் சரிவடைந்து, 5,600 கோடி டாலராக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் எதிர்வரும், 2013-14ம் நிதிஆண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 6,000 - 6,100 கோடி டாலர் அளவிற்கே இருக்கும்.இவ்வாறு, அமன் சதா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|