பதிவு செய்த நாள்
20 மார்2013
00:56
புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013-14 நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், 3.49 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கும் என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம் தெரிவித்தார்.
கடன்பத்திரங்கள்:மத்திய அரசு, வரும் முழு நிதியாண்டிற்கான கடன் இலக்கை, 5.79 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதில், 60 சதவீத கடன், முதல் அரையாண்டில் பெறப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்படும் அரசு கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடன் பத்திரங்களின் முதிர்வு காலம் 5 - 20 ஆண்டுகள் என்ற அளவில் இருக்கும். கடன் பத்திர வெளியீடுகள் மூலம், வாரம் தோறும், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.ஓராண்டிற்கும் குறைவான, குறுகிய கால கடன்கள், அரசு கருவூல பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும். இவற்றின் முதிர்வுக் காலம், 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாட்கள் என, மூன்று பிரிவுகளாக இருக்கும்.இவற்றின் கீழ், திரட்ட திட்டமிட்டுள்ள, 1.45 லட்சம் கோடி ரூபாய், அரசின் மொத்த கடனில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு:வரும் நிதியாண்டில், பணவீக்க குறியீடு அடிப்படையிலான கடன்பத்திரங்களின் (ஐ.ஐ.பீ.,) மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும், நிதிஅமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.தங்கம் மீதான முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன், இத்திட்டம் அறிமுகமாக உள்ளது. இத்திட்டத்திற்கான விதிமுறைகள், அடுத்த, 15 -20 நாட்களில் வெளியிடப்படும் என, நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|