நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும்நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும் ... ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம் ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம் ...
மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
00:56

புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013-14 நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், 3.49 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கும் என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம் தெரிவித்தார்.
கடன்பத்திரங்கள்:மத்திய அரசு, வரும் முழு நிதியாண்டிற்கான கடன் இலக்கை, 5.79 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதில், 60 சதவீத கடன், முதல் அரையாண்டில் பெறப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்படும் அரசு கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடன் பத்திரங்களின் முதிர்வு காலம் 5 - 20 ஆண்டுகள் என்ற அளவில் இருக்கும். கடன் பத்திர வெளியீடுகள் மூலம், வாரம் தோறும், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.ஓராண்டிற்கும் குறைவான, குறுகிய கால கடன்கள், அரசு கருவூல பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும். இவற்றின் முதிர்வுக் காலம், 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாட்கள் என, மூன்று பிரிவுகளாக இருக்கும்.இவற்றின் கீழ், திரட்ட திட்டமிட்டுள்ள, 1.45 லட்சம் கோடி ரூபாய், அரசின் மொத்த கடனில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு:வரும் நிதியாண்டில், பணவீக்க குறியீடு அடிப்படையிலான கடன்பத்திரங்களின் (ஐ.ஐ.பீ.,) மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும், நிதிஅமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.தங்கம் மீதான முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன், இத்திட்டம் அறிமுகமாக உள்ளது. இத்திட்டத்திற்கான விதிமுறைகள், அடுத்த, 15 -20 நாட்களில் வெளியிடப்படும் என, நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)