பதிவு செய்த நாள்
20 மார்2013
09:19
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.09 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15.18 புள்ளிகள் குறைந்து 18992.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6.75 புள்ளிகள் குறைந்து 5739.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, தி.மு.க., விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, மத்திய அரசின் ஸ்திரத்தன்மை குறித்த அச்சப்பாட்டால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. இது, பங்குச் சந்தைகளில், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.வங்கி டெபாசிட்டுகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக, சைப்ரஸ் அரசு, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|