பதிவு செய்த நாள்
20 மார்2013
14:02
தமிழகத்தில், கோடை காலம் வந்தாச்சு. "ஏசி' காரில் பயணம் செய்வது, பெரிய விஷயம் போல கருதப்படும் காலம். எனினும், கோடை காலத்தில், கார்களை பாதுகாக்க, சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வழக்கமான சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பணிகளுடன், இந்த நடைமுறைகளையும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிழலில் நிறுத்துங்க: கோடை காலத்தில், வெட்டவெளியில் காரை நிறுத்துவது கூடாது. கூடிய வரை, காரை, நிழலில் நிறுத்த முயற்சி செய்யுங்கள். அப்போது தான், வெப்பம், காரின் உள்ளே பரவாமல், கார் சீட் கொதிக்காமல் இருக்கும். காரின் உட்பகுதி சூடாகி விட்டால், "ஏசி' போட்ட உடனே, குளிர்ச்சி கிடைக்காது. அதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். இது இன்ஜினுக்கு, கூடுதல் சிரமத்தை அளிக்கும் விஷயம்.
கார் கண்ணாடிகளில், கறுப்பு நிற பிலிம்களை ஒட்ட, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, காரை பார்க்கிங் செய்யும் போது, கார் கண்ணாடிகளை, திரை சீலைகள் மூலம் மூடி மறைக்கலாம். இது, வெப்பம் உள்ளே அதிகரிப்பதை தடுக்கும்.
கோடை காலத்தில், கார் சர்வீஸ் செய்வதுடன், காரில் உள்ள, "ஏசி' வசதியையும், அவ்வப்போது கவனித்து, சர்வீஸ் செய்ய வேண்டும். "ஏசி' காஸ், கூலிங் ஆயில் போன்றவற்றை கவனிக்க வேண்டும். "ஏசி' வசதியில் சேரும், தூசு, கறை போன்றவற்றை நீக்கவேண்டும். கார் கண்ணாடிகளில் ஒட்ட, "எலக்ட்ரோஸ்டாடிக் ஷீட்' போன்ற ஸ்கிரீன் கிடைக்கிறது. பார்க்கிங் செய்யும் போது, இந்த ஷீட்டை கொண்டு, கார் கண்ணாடிகளை மூடலாம். இவ்வகை, "ஷீட்'கள், கார் கண்ணாடிகளை முழுமையாக மூடாது என்றாலும், ஓரளவுக்கு, வெப்பம் உள்ளே வராமல் தடுக்கும். தற்போது வரும் கார்கள், வேகமாக செல்வதற்கு ஏற்ப, காரின் முகப்பு பகுதி, சாய்வாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இவ்வகை கார்களில், வெப்பம் நேரடியாக உள்ளே வருவது, "வின்ட்ஷீல்டு' என்ற முகப்பு பகுதி கண்ணாடி மூலம் தான். எனவே காரை பார்க்கிங் செய்யும் போது, தேவைப்படும் போது இழுத்து மாட்டும் வசதி கொண்ட, "டின்ட்' பிலிமை பயன்படுத்தலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|