பதிவு செய்த நாள்
21 மார்2013
00:39
புதுடில்லி:"மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ஒரு கட்சி (தி.மு.க.,) விலக்கிக் கொண்டுள்ள போதிலும், மெஜாரிட்டி பலம் உள்ளதால், அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்' என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அவர், டில்லியில், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:நாங்கள் நேற்று எப்படி இருந்தோமோ, அப்படியே தான், இன்றும் இருக்கிறோம். வலுவிழந்து விட்டதாக கருதவில்லை. அரசு, தொடர்ந்து அதன் கடமையை செய்து வரும். கடலில் லேசாக புயல் வீசினாலும், தொடர்ந்து கப்பலை செலுத்தும் கடமை எங்களுக்கு உள்ளது. பார்லிமென்டில் மசோதாக்களை தாக்கல் செய்வது தொடரும். பார்லிமென்டில், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ள உள்ளேன். வரும் 201314ம் நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக் குறையை, 5.2 சதவீதத்தில் இருந்து, 4.8 சதவீதமாக குறைக்கும் நோக்கத்தில் இருந்து, அரசு பின் வாங்காது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|