பதிவு செய்த நாள்
22 மார்2013
23:56
சேலம்:"இந்திய பருத்திக் கழகம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, இருப்பு வைத்துள்ள பருத்தியை, உடனடியாக ஜவுளி ஆலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்' என, தென் இந்திய பஞ்சாலைகள் சங்கம் (øŒமா) கோரிக்கை விடுத்துள்ளது.
கொள்முதல்:இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:பருத்தி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம், இந்திய பருத்திக் கழகம் போன்ற அரசு நிறுவனங்கள், பருத்தி வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பருத்தியை விற்காமல் வைத்திருப்பது தான்.
கடந்த, 2012 அக்டோபர் முதல், 2013 பிப்ரவரி வரை, குறிப்பாக சங்கர்-6 வகை பருத்தி, ஒரு கேண்டி (355 கிலோ), 33,500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.இது, பிப்ரவரி 15ம் தேதிக்கு பின், 35 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 38,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.ஜவுளி ஆலைகள், பருத்தியை இறக்குமதி செய்ய வழி வகை இருப்பினும், அவை, இந்தியா வந்து சேர, 45 நாட்களாகும்.
ஆகையினால், பருத்தி வியாபாரிகளும், அரசு கொள்முதல் நிறுவனங்களும் செயற்கையாக பருத்திக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை உயர்விற்கும், ஊக வணிகத்திற்கும் இடம் கொடுத்துள்ளன.பருத்தி விலை உயர்வால், நூலிழை விலை உயர்ந்து, பின்னலாடை, கைத்தறி நெசவுத் தொழில், விசைத்தறி தொழில் ஆகியவை மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகும். ஏனெனில், அவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, மூன்று மாதத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பாதிப்பு:இந்த நிலையை கட்டுப்படுத்தாவிடில், 2010ம் ஆண்டு பருத்தி விலையில் ஏற்பட்ட உயர்வினால், ஜவுளித் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மீண்டும் ஏற்படக் கூடும்.இந்திய பருத்திக்கழகம் போன்ற அரசு கொள்முதல் நிறுவனங்கள், ஆந்திர விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையில் வாங்கிய, 20 லட்சம் பருத்தி பொதிகளை, தற்போதைய விலையில் விற்றாலும் கூட, நல்ல லாபம் பெற முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|