ஓ.என்.ஜி.சி: ரூ.4,050 கோடிசெலவில் மேம்பாட்டு திட்டங்கள்ஓ.என்.ஜி.சி: ரூ.4,050 கோடிசெலவில் மேம்பாட்டு திட்டங்கள் ... நடப்பாண்டில் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்: வரி உயர்வால் பயனில்லை நடப்பாண்டில் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்: வரி உயர்வால் பயனில்லை ...
முகமை அமைப்புகளிடம் உள்ள பருத்தியை விற்பனை செய்ய வேண்டும்: "சைமா'கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
23:56

சேலம்:"இந்திய பருத்திக் கழகம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, இருப்பு வைத்துள்ள பருத்தியை, உடனடியாக ஜவுளி ஆலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்' என, தென் இந்திய பஞ்சாலைகள் சங்கம் (øŒமா) கோரிக்கை விடுத்துள்ளது.
கொள்முதல்:இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:பருத்தி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம், இந்திய பருத்திக் கழகம் போன்ற அரசு நிறுவனங்கள், பருத்தி வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பருத்தியை விற்காமல் வைத்திருப்பது தான்.
கடந்த, 2012 அக்டோபர் முதல், 2013 பிப்ரவரி வரை, குறிப்பாக சங்கர்-6 வகை பருத்தி, ஒரு கேண்டி (355 கிலோ), 33,500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.இது, பிப்ரவரி 15ம் தேதிக்கு பின், 35 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 38,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.ஜவுளி ஆலைகள், பருத்தியை இறக்குமதி செய்ய வழி வகை இருப்பினும், அவை, இந்தியா வந்து சேர, 45 நாட்களாகும்.
ஆகையினால், பருத்தி வியாபாரிகளும், அரசு கொள்முதல் நிறுவனங்களும் செயற்கையாக பருத்திக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை உயர்விற்கும், ஊக வணிகத்திற்கும் இடம் கொடுத்துள்ளன.பருத்தி விலை உயர்வால், நூலிழை விலை உயர்ந்து, பின்னலாடை, கைத்தறி நெசவுத் தொழில், விசைத்தறி தொழில் ஆகியவை மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகும். ஏனெனில், அவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, மூன்று மாதத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பாதிப்பு:இந்த நிலையை கட்டுப்படுத்தாவிடில், 2010ம் ஆண்டு பருத்தி விலையில் ஏற்பட்ட உயர்வினால், ஜவுளித் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மீண்டும் ஏற்படக் கூடும்.இந்திய பருத்திக்கழகம் போன்ற அரசு கொள்முதல் நிறுவனங்கள், ஆந்திர விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையில் வாங்கிய, 20 லட்சம் பருத்தி பொதிகளை, தற்போதைய விலையில் விற்றாலும் கூட, நல்ல லாபம் பெற முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)