முகமை அமைப்புகளிடம் உள்ள பருத்தியை விற்பனை செய்ய வேண்டும்: "சைமா'கோரிக்கைமுகமை அமைப்புகளிடம் உள்ள பருத்தியை விற்பனை செய்ய வேண்டும்: ... ... யூப்டிவி:ஸ்மார்ட் டி.வி.டாங்கிள் அறிமுகம் யூப்டிவி:ஸ்மார்ட் டி.வி.டாங்கிள் அறிமுகம் ...
நடப்பாண்டில் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்: வரி உயர்வால் பயனில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
00:02

தங்கம் இறக்குமதியை குறைக்க, சுங்க வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்துள்ள போதிலும், மக்களிடம் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் போக்கு சற்றும் குறையவில்லை.இந்தியாவில், தங்கம் இறக்குமதிக்கு, 6 சதவீத சுங்க வரியும், 1 சதவீதம் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆபரணங்கள்:நடப்பாண்டில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, 865 - 965 டன்னாக அதிகரிக்கும் என, உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு, 864 டன் என்ற அளவில் இருந்தது.சென்ற ஆண்டை விட, நடப்பாண்டில் தங்கம் வாங்குவதற்கான முகூர்த்த நாட்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் அதிகம் உள்ளதால், தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என, தெரிகிறது.
எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு, தங்கம் வாங்குவதற்கான சுபதினங்களின் எண்ணிக்கையில், 20 நாட்கள் குறைவாக இருந்ததால், தங்கத்திற்கான தேவை, 11 சதவீதம் சரிவடைந்து, 552 டன்னாக குறைந்தது. உலக வங்கியின் ஆய்வறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், தங்கம் உற்பத்தி இல்லாததால், நம்நாடு, ஆபரணங்களை தயாரிக்க, இறக்குமதியாகும் தங்கத்தையே நம்பி உள்ளது. மிகச் குறைந்த அளவில்தான், பழைய தங்க நகைகள், மறுசுழற்சி முறையில், புதிய ஆபரணங்களாக உருவெடுக்கின்றன.
மறுசுழற்சி: கடந்த ஆண்டு, இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு, 864 டன்னாகவும், மறுசுழற்சி தங்கம், 117 டன்னாகவும் இருந்தது.நடப்பு மார்ச் மாதம், தங்க ஆபரணங்களின் விற்பனை நன்கு உள்ளது. இது, வரும் ஜூன் மாதம் வரை தொடரும். பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும். இதையடுத்து, மீண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, தங்க ஆபரணங்கள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்.
"கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் தங்க ஆபரணங்கள் விற்பனை, மதிப்பின் அடிப்படையில், 20 - 25 சதவீதம் உயரும்' என, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மெகுல் சோக்சி தெரிவித்தார்.கடந்த ஆண்டு, திருமண நாட்கள் குறைவாக இருந்ததால், தங்க ஆபரணங்களின் விற்பனையும் குறைவாக இருந்தது. நடப்பாண்டில், திருமணங்கள் உள்ளிட்ட சுபமுகூர்த்த நாட்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், தங்கம் வாங்குவதும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் நிலையில், அதற்கு ஈடாக, தங்கம் இறக்குமதியும் உயரும்' என, உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் தெரிவித்தார்.தங்கம் இறக்குமதி அதிகரித்து, கடந்த ஆண்டின் விலையே, நடப்பாண்டிலும் நீடித்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு, பெரிய அளவில் வெற்றி கிட்டாது.
சுங்க வரி:"நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய பிரச்னையாகும். சுங்க வரியை உயர்த்தி, தங்கத்தின் தேவையை குறைக்க முயற்சிப்பது, சரியல்ல. அதனால், அரசு எதிர்பார்க்கும், சாதகமான பலன்கள் கிடைக்காது' என, சோமசுந்தரம் மேலும் கூறினார்.அமெரிக்க பொருளாதாரம், மந்த நிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் மூலம், அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று, இதர நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கும் நிலையில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என, சோமசுந்தரம் தெரிவித்தார்.
ரூ.51 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்:நடப்பு, 2012-13ம் நிதியாண்டின், முதல் 11 மாத காலத்தில், மத்திய சுங்கத் துறை, 51 கோடி ரூபாய் மதிப்பிலான, கடத்தி வரப்பட்ட, 174.62 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பார்லிமென்டில் தெரிவித்தார்.கடந்த, 2011-12ம் நிதியாண்டில், 34.67 கோடி ரூபாய் மதிப்பிலான, 160.98 கிலோ, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டின் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், நடப்பாண்டு ஜனவரியில், தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி, 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.இதையடுத்து, இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக கடத்தப்படும் தங்கத்தை, சுங்கத் துறை பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது.
உள்நாட்டில், தங்கத்தின் விலையை குறைக்கும் வகையில், தங்கம் மற்றும் தங்க காசுகள் வாங்குவதற்கு, வங்கிகள்கடன் வழங்க கூடாதுஎன, ரிசர்வ் வங்கி, உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)