யூப்டிவி:ஸ்மார்ட் டி.வி.டாங்கிள் அறிமுகம் யூப்டிவி:ஸ்மார்ட் டி.வி.டாங்கிள் அறிமுகம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
2013ல் 3வது முறையாகடீசல் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
11:01

புதுடில்லி: டீசல் விலை லிட்டருக்கு, 45 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஆண்டில், இத்துடன் மூன்றாவது முறையாக, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், இந்த விலை உயர்வு, 55 காசுகளாக இருக்கும்.பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டது முதல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி, 18ம் தேதி, டீசல் விலை, 45 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்பின், பிப்ரவரி, 16ம் தேதியும், அதே அளவு உயர்த்தப்பட்டது.கடந்த, 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.40 ரூபாய் குறைக்கப்பட்டது. அப்போது, டீசல் விலையும், உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விலை உயர்வு முடிவை தள்ளிவைத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பார்லிமென்டின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்ததும், டீசல் விலையை, லிட்டருக்கு, 45 காசுகள் உயர்த்தியுள்ளன.
இந்த விலை உயர்வுக்குப் பின், வாட் மற்றும் உள்ளூர் விற்பனை வரிகள் சேர்த்து, சென்னையில், ஒரு லிட்டர் டீசல் விலை, 51.78 (முந்தைய விலை 51.23) ரூபாய்க்கு விற்கப்படும். அதாவது, முந்தைய விலையுடன், உயர்த்தப்பட்ட விலைகள் மற்றும் வரி சேர்த்து, இந்த விலைக்கு இன்று முதல் விற்கப்படும். மொத்தத்தில், வரிகளுடன் சேர்த்து, 55 காசு உயரும்.இந்த விலை உயர்வுக்குப் பின்னும், டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், லிட்டருக்கு, 8.19 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. மண்ணெண்ணெய் விற்பனையில், 33.43 ரூபாயும், சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 439 ரூபாய் இழப்பை சந்திக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)