பதிவு செய்த நாள்
25 மார்2013
01:21
கோல்கட்டா:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் வரும், 2013-14ம் நிதியாண்டில், 48.20 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, நிலக்கரி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது, நடப்பு நிதியாண்டின் நிலக்கரி உற்பத்தி இலக்கான, 46.41 கோடி டன்னை காட்டிலும், 4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரும் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை இலக்கு, 49.20 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டின் விற்பனை இலக்கான, 47 கோடி டன்னை காட்டிலும், 5 சதவீதம் அதிகமாகும்.வரும் நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கை எட்ட, அவற்றின் வளர்ச்சி விகிதம் முறையே, 7.11 சதவீதம் மற்றும் 5.80 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|