பதிவு செய்த நாள்
25 மார்2013
01:22
விசாகப்பட்டினம்:நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.டி.,) ஏற்றுமதி, 3.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என, இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பின் இணை இயக்குனர் பீ.சுரேஷ் தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஐ.டி., துறை முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. உள்நாட்டில், ஐ.டி., மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில், 30 லட்சம், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் மூன்று லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர்.
மொத்த பொறியியல் பட்டதாரிகளில், 18 சதவீதத்தினர் மட்டுமே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள், புள்ளி விவரங்கள் சேர்க்கை, மருத்துவ புள்ளி விவரங்கள் தொடர்பான சேவை, பீ.பி.ஓ., பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரிகள், சாப்ட்வேர் தொடர்பான பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டும். இத்துறையை தேர்ந்தெடுக்கும், மாணவர்கள் தகவல் தொடர்பு ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், சர்வதேச அளவில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என, சுரேஷ் மேலும் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|