பதிவு செய்த நாள்
25 மார்2013
01:24
புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.97 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே போன்று, இயற்கை எரிவாயு உற்பத்தியும், 20.08 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி., நடப்பு, 2013ம் ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 288.40 கோடி கன மீட்டராக சரிவடைந்து உள்ளது. கடந்த 2012ம் ஆண்டின் இதே மாதத்தில், இதன் உற்பத்தி, 360.90 கோடி கன மீட்டராக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இதன் உற்பத்தி, 20.08 சதவீதம் சரிவை கண்டுள்ளது.குறிப்பாக, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி, சென்ற பிப்ரவரியில், 5.8 சதவீதம் குறைந்து, 180.40 கோடி கன மீட்டராக சரிவடைந்து உள்ளது.
இதே போன்று, ஆயில் இந்தியா நிறுவனத்தின், இயற்கை எரிவாயு உற்பத்தி, 1.8 சதவீதம் சரிவடைந்து, 196.30 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது.சென்ற பிப்ரவரியில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 28.76 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இதன் உற்பத்தி, 29.95 லட்சம் டன்னாக அதிகரித்திருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.97 சதவீதம் சரிவடைந்துள்ளது.குறிப்பாக, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 5.2 சதவீதம் குறைந்து, 18.38 லட்சம் டன்னிலிருந்து, 17.42 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
பீ.பி.சி.எல்.,அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், சுத்திகரிப்பு நிறுவனங்களின் எண்ணெய் உற்பத்தி, 4.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 141.61 லட்சம் டன்னிலிருந்து, 147.67 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த பீ.பி.சி.எல்., மற்றும் எச்.பி.சி.எல்., தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகியவை எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தியில் முக்கிய நிறுவனங்களாக திகழ்கின்றன.öŒன்ற பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு, 124.36 லட்சம் டன்னிலிருந்து, 122.49 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது என, பெட்ரோலிய அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|