பதிவு செய்த நாள்
25 மார்2013
14:21
சென்ற 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 21.8 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும். ஆசிய கண்டத்தில் மொபைல் விற்பனையைக் கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 1.63 கோடியாக 48 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டிலும், ஸ்மார்ட் போன் விற்பனை மிக வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஸ்மார்ட் போன் விற்பனை மட்டும் 70 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஸ்மார்ட் போன் விற்பனை 54 லட்சமாக உயர்ந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. இந்த சந்தையில், இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களும் தங்களின் பங்கினைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, ரூ.5,000 என்ற விலை அளவில் ஸ்மார்ட் போன்களை அதன் அடிப்படை வசதிகளுடன் அளிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன்களும் தங்கள் பங்கினைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|