பதிவு செய்த நாள்
26 மார்2013
00:23
புதுடில்லி:வரும் 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, 2.45 கோடி டன்னாக அதிகரிக்கும் என, சர்வதேச சர்க்கரை கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) தெரிவித்துள்ளது.தற்போது, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி நிலவுவதால், இம்மாநில விவசாயிகள், இன்னும் கரும்பு பயிரிடும் பணியை துவக்கவில்லை.
இந்நிலையிலும், நடப்பாண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, 2.45 கோடி டன்னாக உயரும் என, ஐ.எஸ்.ஓ.,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதற்கிடையே, வரும் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.20-2.30 கோடி டன் என்ற அளவில் சரிவடையும். இது, நடப்பு பருவத்தில், 2.45-2.50 கோடி டன் என்ற அளவில் உயர்ந்து காணப்படும் என, தேசிய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர், வினய் குமார் தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|