பதிவு செய்த நாள்
26 மார்2013
00:27
குன்னூர்:"கோல்டன் லீப் இந்தியா' விருதை எட்டு தேயிலை நிறுவனங்கள் பெற்றுள்ளன.தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் தேயிலை வாரியத்தின் சார்பில், ஆண்டு தோறும் சிறந்த தேயிலை தூள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, "கோல்டன் லீப் இந்தியா' விருது வழங்கப்படுகிறது.
வால்பாறை:நடப்பாண்டிற்கான போட்டி குன்னூர் உபாசி அரங்கில் நடைபெற்றது.இதில், நீலகிரி, வால்பாறை, கேரள மாநிலம் வயநாடு, மூணாறு மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து, 75 நிறுவனங்கள் பங்கேற்றன. இப்போட்டியில், 125 வகை தேயிலையின் மணம், தரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.இதில், உட்பாரியர் குழுமத்தின் தேயிலைக்கு ஆறு விருதுகள் கிடைத்தன. யுனைடெட் நீலகிரி டீ எஸ்டேட் ஐந்து விருதுகளும், ஹாரிசன் மலையாளம் போர்டு நிறுவனம், ஜூன்கூட்லி டீ இன்டஸ்டரிஸ், விக்னேஸ்வரா எஸ்டேட் டீ பேக்டரி ஆகியவை தலா மூன்று விருதுகளும், கண்ணன் தேவன், கீழ்கோத்தகிரி டீ எஸ்டேட், பவானி டீ எஸ்டேட் ஆகியவை, தலா ஒரு விருதையும் வென்றன.
சிறப்பு ஏலம்:வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் 15ம் தேதி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.போட்டியின் அமைப்பாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:இந்த போட்டியில் பங்கு பெற்ற தேயிலை நிறுவனங்களில் தேயிலை தூள்களுக்கு உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையை ஏற்படுத்தித் தர, வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி சிறப்பு ஏலம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக, 62 டன் தேயிலை தூள் விற்பனைக்கு தயாராக உள்ளது. குன்னூர், கோவை, கோல்கட்டா உட்பட நாட்டின் அனைத்து இடங்களில் உள்ள தேயிலை ஏல மையங்கள் மூலமும் வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கு பெற்று, தேயிலை தூளை வாங்கலாம்.சர்வதேச அளவில் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் தேயிலை தூளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|