பதிவு செய்த நாள்
26 மார்2013
00:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்கதினமான திங்கட்கிழமையன்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக,"சென்செக்ஸ்' குறியீட்டு எண் சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், உலோகம், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 54.18 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,681.42 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,950.22 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,624.40 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 17.50 புள்ளிகள் குறைந்து, 5,633.85 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,718.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,624.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|