பதிவு செய்த நாள்
27 மார்2013
08:50
சாதாரண மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், "ஏசி' வகுப்புகளுக்கான, ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.பார்லிமென்டில், கடந்த மாதம், 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்படும். அத்துடன், அதிவிரைவு ரயில்களில் பயணிக்க,கட்டணங்களுக்கு மேலாக, கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதே நேரத்தில், இந்த கட்டண உயர்வு எவ்வளவு என்பது, விரைவில் தெரிவிக்கப்படும் என்றும், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த கட்டண உயர்வுகள் குறித்த விவரத்தை, ரயில்வே அமைச்சகம் நேற்றுவெளியிட்டது. இந்த கட்டண உயர்வு, வரும், ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|