பதிவு செய்த நாள்
28 மார்2013
03:03
மும்பை:நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன், 234 கோடி டாலராக (12,870 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 260 கோடி டாலராக (14,300 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன், 350 கோடி டாலராக (19,250 கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.இந்திய நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் மற்றும் அன்னியச் செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்களை வெளியிட்டு, வெளிநாடுகளிலிருந்து, தேவையான நிதியை திரட்டி கொள்கின்றன.
இவ்வகையில், நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன், 2,716 கோடி டாலராக (1.49 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது.சென்ற பிப்ரவரியில், அதிகளவு வெளிநாட்டு கடன் திரட்டி கொண்டதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அம்மாதத்தில், 80 கோடி டாலர் (4,400 கோடி ரூபாய்) அளவிற்கு நிதி திரட்டி கொண்டுள்ளது.இதையடுத்து, என்.டி.பி.சி., (25 கோடி டாலர்), பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (25 கோடி டாலர்), கீதாஞ்சலி ஜெம்ஸ் (20 கோடி டாலர்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|