இந்திய நிறுவனங்கள் திரட்டியவெளிநாட்டு கடன் 234 கோடி டாலர்இந்திய நிறுவனங்கள் திரட்டியவெளிநாட்டு கடன் 234 கோடி டாலர் ... டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ...
தனிநபர் சமையல் எண்ணெய் நுகர்வு 14 கிலோவாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
03:08

நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர் சமையல் எண்ணெய் நுகர்வு, 13.92 கிலோவாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் பயன்பாட்டு அளவை (13.36 கிலோ) விட, 4.19 சதவீதம் அதிகம் என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா:உலகளவில், பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், இதன் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு உயர்ந்து உள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் பயன்பாடு, 1.76 கோடி டன்னாக இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டின் பயன்பாட்டு அளவை விட, 6 சதவீதம் அல்லது, 10 லட்சம் டன் அதிகமாகும்.மலேசியாவில் பாமாயில் உற்பத்தி, நடப்பாண்டில், 1.95 -1.97 கோடி டன்னாகவும், இந்தோனேஷியாவில் இதன் உற்பத்தி, 3.05 கோடி டன்னாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில், தேவையை விட, 60 லட்சம் டன் அளவிற்கு கூடுதலாக, சமையல் எண்ணெய் உற்பத்தி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொலம்பியா:மேற்கண்ட நாடுகள் தவிர, தாய்லாந்து, மத்திய அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும், பாமாயில் எண்ணெய் உற்பத்தி உயர வாய்ப்புள்ளது. எனவே, உலகளவில், சமையல் எண்ணெய் உற்பத்தி, தேவையை விட அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், விலை குறைவதுடன், பயன்பாடும் அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)