பதிவு செய்த நாள்
28 மார்2013
03:08
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர் சமையல் எண்ணெய் நுகர்வு, 13.92 கிலோவாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் பயன்பாட்டு அளவை (13.36 கிலோ) விட, 4.19 சதவீதம் அதிகம் என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா:உலகளவில், பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், இதன் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு உயர்ந்து உள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் பயன்பாடு, 1.76 கோடி டன்னாக இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டின் பயன்பாட்டு அளவை விட, 6 சதவீதம் அல்லது, 10 லட்சம் டன் அதிகமாகும்.மலேசியாவில் பாமாயில் உற்பத்தி, நடப்பாண்டில், 1.95 -1.97 கோடி டன்னாகவும், இந்தோனேஷியாவில் இதன் உற்பத்தி, 3.05 கோடி டன்னாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில், தேவையை விட, 60 லட்சம் டன் அளவிற்கு கூடுதலாக, சமையல் எண்ணெய் உற்பத்தி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொலம்பியா:மேற்கண்ட நாடுகள் தவிர, தாய்லாந்து, மத்திய அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும், பாமாயில் எண்ணெய் உற்பத்தி உயர வாய்ப்புள்ளது. எனவே, உலகளவில், சமையல் எண்ணெய் உற்பத்தி, தேவையை விட அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், விலை குறைவதுடன், பயன்பாடும் அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|