பதிவு செய்த நாள்
28 மார்2013
14:28
சென்னை: அகில இந்திய மோட்டார் காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, மோட்டார் வாகனங்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில், 45 லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றுக் கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம், ஆண்டுதோறும், 15 சதவீதம் அதிகரிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு, பிப்ரவரி, 16ம் தேதி, ஆறு டயர் லாரிக்கு, 107 சதவீதமும், 10 டயர் லாரிக்கு, 44 சதவீதமும் பிரிமியம் உயர்த்தப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், பிரிமியக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி, ஏப்ரல், 1ம் தேதி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. இதையடுத்து, மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமியக் கட்டணத்தை, மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன்படி, தனியார் கார்களுக்கான பிரிமியம், 38.87 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மூன்று சக்கர வாகனங்களுக்கான பிரிமியம், 30.21 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும், தனியார் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கான பிரிமியம், 32.99 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 17 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான பிரிமியம், 45.99 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான பிரிமியம், 26.43 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும், சிறப்பு வாகனங்களுக்கான பிரிமியம், 176.45 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|