தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ...
மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
14:28

சென்னை: அகில இந்திய மோட்டார் காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, மோட்டார் வாகனங்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில், 45 லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றுக் கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம், ஆண்டுதோறும், 15 சதவீதம் அதிகரிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு, பிப்ரவரி, 16ம் தேதி, ஆறு டயர் லாரிக்கு, 107 சதவீதமும், 10 டயர் லாரிக்கு, 44 சதவீதமும் பிரிமியம் உயர்த்தப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், பிரிமியக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி, ஏப்ரல், 1ம் தேதி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. இதையடுத்து, மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமியக் கட்டணத்தை, மத்திய அரசு குறைத்துள்ளது.

இதன்படி, தனியார் கார்களுக்கான பிரிமியம், 38.87 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மூன்று சக்கர வாகனங்களுக்கான பிரிமியம், 30.21 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும், தனியார் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கான பிரிமியம், 32.99 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 17 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான பிரிமியம், 45.99 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான பிரிமியம், 26.43 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும், சிறப்பு வாகனங்களுக்கான பிரிமியம், 176.45 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)