பதிவு செய்த நாள்
28 மார்2013
15:53
சென்னை: மின்னணு சாதனங்கள் தயாரிப்பில், முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான, தோஷிபா இந்தியா, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, புதிய வகை எல்.இ.டி., "டிவி'க்களை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சஞ்சய் வர்கி கூறியதாவது: இந்திய சந்தைகளில், எல்.இ.டி., "டிவி'க்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை, நிறுவனம், சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, அதிநவீன தொழில்நுட்பத்தில், "சிந்திக்கும் எல்.இ.டி' என்ற, 29 அங்குல (73.6 செ.மீ) "டிவி'யை, இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. பி.பீ 200 மற்றும் பி.யு 200 என்ற இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, எல்.இ.டி., "டிவி'க்களின் விலை முறையே, 22,900 மற்றும் 23,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிறந்த தரம், ஒலி அமைப்பு மற்றும் மின் சேமிப்பு ஆகியவை, இதன் முக்கிய அம்சங்களாகும். இதில் உள்ள, "ஆட்டோ சிக்னல் பூஸ்டர்' தொழில்நுட்பம், குறைவாக கிடைக்கும் சிக்னலை, அதிகரித்து வழங்கும் தன்மை உடையது. இவ்வாறு, சஞ்சய் வர்கி கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|