பதிவு செய்த நாள்
28 மார்2013
17:04
மும்பை : வாரத்தின் நான்காவது நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள், மதியத்திற்கு பிறகு நல்ல ஏற்றம் கண்டன, இதனால் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 131 புள்ளிகளும், நிப்டி 41 புள்ளிகளும் ஏற்றத்தில் முடிந்தன. ஐரோப்பிய பங்குசந்தைகள் கொடுத்த ஏற்றம் மற்றும் வருடத்தின் இறுதிவாரம் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கவும், விற்கவும் செய்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டதாக பங்கு முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 131.24 புள்ளிகள் உயர்ந்து 18,835.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 40.95 புள்ளிகள் உயர்ந்து 5,682.55 எனும் அளவிலும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ, ஸ்டர்லைட் கெயில் இந்தியா, இன்போசிஸ், ஐசிஐசிஐ., எச்.டி.எப்.சி., எஸ்பிஐ., உள்ளிட்ட பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|