பதிவு செய்த நாள்
28 மார்2013
23:12
புதுடில்லி :நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.07 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.05 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் நிதி பற்றாக்குறை, நடப்பு முழு நிதியாண்டிற்கு, 5.21 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மறுமதிப்பீட்டு அளவில், 97.4 சதவீதத்தை எட்டியுள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 5.2 சதவீதம் என்ற அளவில் குறையும் என, பட்ஜெட் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மறு மதிப்பீட்டு அளவை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|