பதிவு செய்த நாள்
28 மார்2013
23:16
புதுடில்லி: நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் இரு தினங்களே உள்ளதால், வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் @நரடி வரி வசூல் இலக்கு, 7.42 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது, மறுமதிப்பீட்டில், 5.71 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த இலக்கை கூட, எட்ட முடியாத நிலை உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில், வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட, மறுமதிப்பீட்டு இலக்கில், 77 சதவீத அளவிற்கே எட்டப்பட்டுள்ளதாக, கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.மத்திய நிதி அமைச்சகம், வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில், தனி நபர் மற்றும் நிறுவனங்கள், வரும் 31ம் தேதிக்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு, ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.எனினும், வரி வசூல் குறைவாகவே உள்ளதாக, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டை விட, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான, வரி வசூல் இலக்கில், 30 ஆயிரம் கோடி ரூபாய் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|