பதிவு செய்த நாள்
28 மார்2013
23:18
திருச்சி :அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில் உள்ள, 20 விமான நிலையங்களை, மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) உறுப்பினர் (செயல்பாடு) ஜி.கே.சவுக்கியால் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:வரும் 2018ம் ஆண்டிற்குள், உள்நாட்டில், 20 விமான நிலையங்களை, அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மேம்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள், ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக, புதிய முனையங்கள் அமைப்பது, பயணிகள் கையாளும் திறனை தற்போதைய, 400 என்ற எண்ணிக்கையிலிருந்து, 700 ஆக அதிகரிப்பது போன்ற பல்வேறு திட்டங்களை, ஆணையம் கவனமாக பரிசீலித்து வருகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆணையம், உள்நாட்டில் உள்ள, 58 விமான நிலையங்களை மேம்படுத்தியும், தரம் உயர்த்தியும் உள்ளது.தற்போது, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 125 விமான நிலையங்களை பராமரித்து வருகிறது. இதில், 10 விமான நிலையங்கள் மட்டுமே லாபகரமாக செயல்படுகின்றன. இவ்வாறு சவுக்கியால் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|