பதிவு செய்த நாள்
30 மார்2013
01:23
புதுடில்லி;நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 1 கோடி டன்னை எட்டும். இதில், பாசுமதி அரிசியின் பங்கு, 33 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பஞ்சாப், அரியானா மாநிலங்களில், பாசுமதி பயிரிடும் பரப்பளவு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. அது போன்று, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், நெல் பயிரிடும் பரப்பளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
இது போன்ற காரணங்களால், நாட்டின் அரிசி உற்பத்தி உயர்ந்து, இதன் ஏற்றுமதி அதிகரிக்கும். நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் சாதாரண அரிசி ஏற்றுமதி, 70-75 லட்சம் டன்னை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், தாய்லாந்திடம் 1.70 கோடி டன் அரிசி கையிருப்பும், வியட்நாம் மற்றும் மியான்மர் நாடுகளின் மலிவு விலை அரிசியும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.நடப்பு 2012-13ம் கரீப் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் நெல் உற்பத்தி, 10.10 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம், 3.50 கோடி டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|