பதிவு செய்த நாள்
30 மார்2013
01:25
புதுடில்லி:சர்க்கரை ஆலைகள், அடுத்த ஆறு மாதங்களில், 1.04 கோடி டன் சர்க்கரையை, வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை, படிப்படியாக தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், ஆலைகளிடம் இருப்பில் உள்ள சர்க்கரையில், 1.04 கோடி டன் சர்க்கரையை, வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது, ஆலைகள், அரசு நிர்ணயிக்கும் அளவிற்கே, மாதந்தோறும் வெளிச்சந்தையில் சர்க்கரையை விற்பனை செய்ய வேண்டும்.
அரசின் புதிய உத்தரவுப்படி, இனி ஆலைகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள், எப்போது வேண்டுமென்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான சர்க்கரையை வெளிச்சந்தையில் விற்பனை செய்யலாம் என்பது, குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அபினாஷ் வர்மா கூறியதாவது:ஆலைகளிடம் விற்பனை ஆகாமல் உள்ள சர்க்கரையை, முகமை அமைப்புகள், கொள்முதல் செய்யாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
மாதந்தோறும் குறிப்பிட்ட அளவிற்குத்தான், சர்க்கரையை வெளிச்சந்தையில் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதும், ஆறு மாதங்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் சர்க்கரையை விற்பனை செய்ய அனுமதித்திருப்பதும், சர்க்கரை துறை சீர்திருத்தத்தை நோக்கி நடைபோடுவதை குறிக்கிறது.
சர்க்கரை ஆலைகள், அவற்றின் பணவரவு குறித்து திட்டமிட்டு செயல்படவும், இத்தகைய நடவடிக்கை துணை புரியும். இவ்வாறு வர்மா தெரிவித்தார்.அரசின் அறிவிப்பை தொடர்ந்து, முன்பேர சந்தைகளில் சர்க்கரை விலை சரிவடைந்துள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் ( ஆக.,- செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.46 கோடி டன்னாகவும், தேவை 2.30 கோடி டன்னாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|