பதிவு செய்த நாள்
30 மார்2013
09:52
தமிழகத்தில், நலிந்த கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த, ஐந்தாவது கட்டமாக, 72.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில், நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த, 2009ல், வைத்தியநாதன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி பரிந்துரைப்படி, நலிந்த வங்கிகளை மேம்படுத்த, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 2,090 கோடி ரூபாய் ஆந்திராவுக்கும், அடுத்ததாக, தமிழகத்துக்கு, 1,460 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், தமிழக அரசு பங்களிப்பாக, 210 கோடி ரூபாய் சேர்த்து, மொத்தம், 1,670 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்தொகையில், நான்கு தவணையாக, இதுவரை மொத்தம், 1,310 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "கூட்டுறவு தேர்தல் நடத்தினால் மட்டுமே, நிலுவைத் தொகை, 360 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, வைத்தியநாதன் கமிட்டி, திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி, கூட்டுறவு தேர்தல் நடப்பதால், நிலுவைத் தொகையில், 72.08 கோடி ரூபாய், ஐந்தாவது கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையில், ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு முறையே, 4 கோடி; 11.27 கோடி; 4.20 கோடி; 50.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தமிழகம் முழுவதும், 23 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 1.88 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|