நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.5,775 கோடி உயர்வுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.5,775 கோடி உயர்வு ... சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 25 சதவீதம் சரிவு: "அசோசெம்' சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 25 சதவீதம் சரிவு: "அசோசெம்' ...
கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 5.20 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:41

மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 5.20 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், புழக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 4.40 லட்சமாக இருந்தது.

ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 19.6 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2007-08ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரை, புழக்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை,சராசரியாக,3.90லட்Œம் என்ற அளவில் உள்ளது.

குறிப்பாக, கடந்த 2009ம் ஆண்டு வரையில், சுவிட்சர்லாந்து வங்கிகள் கண்டுபிடித்த, இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவாகவே இருந்தது. இருப்பினும், இதன் எண்ணிக்கை, 2010ம் ஆண்டு முதல் வெகுவாக அதிகரித்தது. அதாவது, அவ்வாண்டில், அந்நாட்டில், 212 ஆக இருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில், ஐந்து மடங்கு அதிகரித்து, 1,144 ஆக உயர்ந்தது.

இந்திய வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில், 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு, 56 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், 1,000 ரூபாய் நோட்டுகள், 5.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இவை தவிர, 10,20,50 ரூபாய் கள்ள நோட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கண்டறியப்பட்டு உள்ளன.இந்திய ரூபாய் மட்டுமின்றி, அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஸ்விஸ் பிராங்க் ஆகியவற்றின் கள்ள நோட்டுகளும், வங்கியாளர்களால் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)