பதிவு செய்த நாள்
31 மார்2013
00:41
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 5.20 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், புழக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 4.40 லட்சமாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 19.6 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2007-08ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரை, புழக்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை,சராசரியாக,3.90லட்Œம் என்ற அளவில் உள்ளது.
குறிப்பாக, கடந்த 2009ம் ஆண்டு வரையில், சுவிட்சர்லாந்து வங்கிகள் கண்டுபிடித்த, இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவாகவே இருந்தது. இருப்பினும், இதன் எண்ணிக்கை, 2010ம் ஆண்டு முதல் வெகுவாக அதிகரித்தது. அதாவது, அவ்வாண்டில், அந்நாட்டில், 212 ஆக இருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில், ஐந்து மடங்கு அதிகரித்து, 1,144 ஆக உயர்ந்தது.
இந்திய வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில், 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு, 56 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், 1,000 ரூபாய் நோட்டுகள், 5.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இவை தவிர, 10,20,50 ரூபாய் கள்ள நோட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கண்டறியப்பட்டு உள்ளன.இந்திய ரூபாய் மட்டுமின்றி, அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஸ்விஸ் பிராங்க் ஆகியவற்றின் கள்ள நோட்டுகளும், வங்கியாளர்களால் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|