பதிவு செய்த நாள்
02 ஏப்2013
00:49
புதுடில்லி:கடந்த, 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை, 6,059 கோடி ரூபாயாக சற்று உயர்ந்துள்ளது.10 நிறுவனங்கள்:இது, முந்தைய, 2011-12ம் நிதிஆண்டில் திரட்டப்பட்ட (5,808 கோடி ரூபாய்) தொகையை விட, 4 சதவீதம் அதிகமாகும்.இருப்பினும், இத்தொகை, அதற்கும் முந்தைய, 2010-11ம் நிதியாண்டில் திரட்டப்பட்ட, 33,183 கோடி ரூபாயை விட, மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நிதியாண்டில், 10 நிறுவனங்களும், 2011-12ம் நிதியாண்டில், 33 நிறுவனங்களும், 2010-11ம் நிதியாண்டில், 52 நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன.கடந்த நிதியாண்டில், பல நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பங்கு வெளியீட்டை மேற்கொண்டன.
மேலும் ஒரு சில நிறுவனங்கள், "செபி' அமைப்பின் அனுமதி பெற்ற நிலையிலும், போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததால், பங்கு வெளியீட்டை விலக்கிக் கொண்டன.
பார்தி இன்ப்ராடெல்:சென்ற நிதியாண்டில், தொலைத்தொடர்பு கோபுர வசதி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, பார்தி இன்ப்ராடெல் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 4,118 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. தாரா ஜுவல்ஸ்:இது, கடந்த, 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு வெளிவந்த, மிகப் பெரிய பங்கு வெளியீடாகும்.சென்ற நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீடு வாயிலாக, 15,475 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
கடந்த நிதியாண்டில், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிறுவனங்களுள், பி.சி.ஜுவல்லர்ஸ், திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி, தாரா ஜுவல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், ஆபரணங்கள் துறையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மூன்று நிறுவனங் களும், முறையே, 609 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் மற்றும் 170 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிக் கொண்டன.தரக்குறியீட்டை வழங்கி வரும், கேர் நிறுவனம், சென்ற நிதிஆண்டில், புதிய பங்கு வெளியீடு மூலம், 500 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
மேலும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், 270 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளது.மதர்சன் பைனான்ஸ் :அதேசமயம், சில்லரை வணிக நிறுவனமான, சாய் சில்க்ஸ், பேக்கேஜிங் துறையைச் சேர்ந்த பிளாஸ்டின் இந்தியா மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் துறையைச் சேர்ந்த சம்வர்தனா மதர்சன் பைனான்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை விலக்கிக் கொண்டன.மேற்கண்ட மூன்று நிறுவனங் களுமாக, புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, ஒட்டு மொத்த அளவில், 1,832 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|