மோட்டார் வாகனங்கள் விற்பனையில் சுணக்க நிலைமோட்டார் வாகனங்கள் விற்பனையில் சுணக்க நிலை ... முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.5 சதவீதமாக பின்னடைவு முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.5 சதவீதமாக பின்னடைவு ...
புதிய பங்கு வெளியீடுகள்: திரட்டிய தொகை ரூ.6,059 கோடி:சென்ற 2012-13ம் நிதி ஆண்டில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
00:49

புதுடில்லி:கடந்த, 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை, 6,059 கோடி ரூபாயாக சற்று உயர்ந்துள்ளது.10 நிறுவனங்கள்:இது, முந்தைய, 2011-12ம் நிதிஆண்டில் திரட்டப்பட்ட (5,808 கோடி ரூபாய்) தொகையை விட, 4 சதவீதம் அதிகமாகும்.இருப்பினும், இத்தொகை, அதற்கும் முந்தைய, 2010-11ம் நிதியாண்டில் திரட்டப்பட்ட, 33,183 கோடி ரூபாயை விட, மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நிதியாண்டில், 10 நிறுவனங்களும், 2011-12ம் நிதியாண்டில், 33 நிறுவனங்களும், 2010-11ம் நிதியாண்டில், 52 நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன.கடந்த நிதியாண்டில், பல நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பங்கு வெளியீட்டை மேற்கொண்டன.
மேலும் ஒரு சில நிறுவனங்கள், "செபி' அமைப்பின் அனுமதி பெற்ற நிலையிலும், போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததால், பங்கு வெளியீட்டை விலக்கிக் கொண்டன.
பார்தி இன்ப்ராடெல்:சென்ற நிதியாண்டில், தொலைத்தொடர்பு கோபுர வசதி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, பார்தி இன்ப்ராடெல் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 4,118 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. தாரா ஜுவல்ஸ்:இது, கடந்த, 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு வெளிவந்த, மிகப் பெரிய பங்கு வெளியீடாகும்.சென்ற நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீடு வாயிலாக, 15,475 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
கடந்த நிதியாண்டில், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிறுவனங்களுள், பி.சி.ஜுவல்லர்ஸ், திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி, தாரா ஜுவல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், ஆபரணங்கள் துறையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மூன்று நிறுவனங் களும், முறையே, 609 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் மற்றும் 170 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிக் கொண்டன.தரக்குறியீட்டை வழங்கி வரும், கேர் நிறுவனம், சென்ற நிதிஆண்டில், புதிய பங்கு வெளியீடு மூலம், 500 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
மேலும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், 270 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளது.மதர்சன் பைனான்ஸ் :அதேசமயம், சில்லரை வணிக நிறுவனமான, சாய் சில்க்ஸ், பேக்கேஜிங் துறையைச் சேர்ந்த பிளாஸ்டின் இந்தியா மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் துறையைச் சேர்ந்த சம்வர்தனா மதர்சன் பைனான்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை விலக்கிக் கொண்டன.மேற்கண்ட மூன்று நிறுவனங் களுமாக, புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, ஒட்டு மொத்த அளவில், 1,832 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)