பதிவு செய்த நாள்
03 ஏப்2013
00:01
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2 சதவீதம் சரிவடைந்து, 2.30 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2011-12ம் பருவத்தின், இதே காலத்தில், 2.34 கோடி டன்னாக சற்று அதிகரித்து காணப்பட்டது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது. வறட்சி நிலவிய போதும், மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி, 77 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. எனினும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 4 சதவீதம் சரிவடைந்துள்ளது.அதேசமயம், உத்தரபிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி, 66.70 லட்சம் டன்னிலிருந்து, 67.50 லட்சம் டன்னாக சற்று அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் சர்க்கரை உற்பத்தி, 7 சதவீதம் சரிவடைந்து, 32.90 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதே போன்று, தமிழகத்திலும் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 13.50 லட்சம் டன்னாக உள்ளது.நடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.46 கோடி டன்னாக இருக்கும் என, "இஸ்மா' மதிப்பீடு செய்துள்ளது. இது, முந்தைய பருவத்துடன் ஒப்பிடுகையில், 14 லட்சம் டன் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|