பதிவு செய்த நாள்
03 ஏப்2013
00:04
மும்பை:ஆக்சிஸ் பேங்க், சுயதொழில் புரியும் தனி நபர்களுக்கு, பிரத்யேக வீட்டு வசதி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது."எம்பவர் ஹோம் லோன்' என்ற இத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை, மாறுபடும் வட்டி விகிதத்தில் வீட்டு வசதி கடன் வழங்கப்படும்.வாங்கிய கடனை, தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவோருக்கு, இரண்டு, மூன்று மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில், வட்டி விகிதம் குறைக்கப்படும்.சுயதொழில் புரிவோருக்கு, கடன் கிடைப்பது குறைவாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இப்பிரிவினருக்கென, பிரத்யேக வீட்டு வசதி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடனை ஒழுங்காக திரும்பச் செலுத்துவோருக்கு, சலுகையும் வழங்கப்படுகிறது என, ஆக்சிஸ் பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|